Ad Widget

வித்தியா படுகொலை வழக்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பன்னிரன்டு பேரின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வித்தியா படுகொலை செய்யப்பட்டு இரண்டு வருடங்களாகும் நிலையில் கொலை சந்தேக நபர்கள் மீதான குற்றப்பத்திரம் இதுவரை தாக்கல் செய்யப்பட்டவில்லை.



12 சந்தேகநபர்களில் முதல் பத்து பேரினது நீதிவான் நீதிமன்ற விளக்கமறியல் காலம் ஒருவருடத்தை கடந்துவிட்ட நிலையில் மேலும் ஒரு வருடம் நீதிவான் நீதிமன்றில் வைத்து விசாரனை செய்வதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் பகுதி பகுதியாக அனுமதியும் வழங்கியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கானது ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பன்னிரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts