Ad Widget

வித்தியா படுகொலை: மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைய ஐந்து ஆண்டுகளாகும்!!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவுபெற குறைந்தது 5 ஆண்டுகள் எடுக்கும் என சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார்.

5 குற்றவாளிகள் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை முனவைத்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“வித்தியா படுகொலை வழக்கின் மூலப் பிரதிகள் (ஊர்காவற்றுறை நீதிவான் மன்ற வழக்குப் பதிவேடு மற்றும் தீர்ப்பாயத்தின் பதிவேடு) சிங்கள மொழிக்கு மாற்றப்பட வேண்டும்.

அவை சுமார் 4 ஆயிரம் பக்கங்களைக் கொண்டவை. அதற்காகக் குறைந்தது ஒரு ஆண்டு போய்விடும். தலைமை நீதியரசர் 5 நீதியரசர்கள் அடங்கிய நீதியரசர்கள் குழாமை நியமிக்க வேண்டும்.

அந்தக் குழாம் வழக்கை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு விடயத்திலும் உள்ள தவறுகளை நாம் சுட்டிக்காட் முடியும்.

எனவே 5 ஆண்டுகளுக்குப் பின்னே இறுதி முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என்று சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன மேலும் தெரிவித்தார்.

Related Posts