Ad Widget

வித்தியாவின் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்களை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி வழக்கின் விசாரணைகள் கொழும்பிற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்காவற்துறை மக்கள் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts