“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனின் விருப்பத்திற்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஒரு போதும் முடியாது” என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் முகமாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விக்னேஷ்வரனின் தாளத்துக்கு ஆடுவதற்கு நாம் தயாரில்லை என்பதுடன் அவரது வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் கனவும் பலிக்காது. அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதுடன், விக்னேஷ்வரனின் எதிர்பார்ப்புக்கள் எதுவும் நிறைவேற மாட்டாது. தமிழ் மக்கள் இனியும் அவரை நம்பிப் பிரயோசனம் இல்லை” என அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.