Ad Widget

வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல்

வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கை ஒன்று இன்று வௌியிடப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது எனத் தெரிகிறது.

மேலும், இலங்கை பெற்றோல் களஞ்சிய டர்மினல்ஸில் இருந்து, இன்று 2400 மெற்றிக்தொன் பெற்றோலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts