Ad Widget

வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசியப் பேரவை மக்கள் சந்திப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்று 08.01.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை- மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டனர்.

நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு, பரந்தன், புளியங்குளம் முத்துமாரி நகர், கனகராயன்குளம் பெரியகுளம், வவுனியா வடக்கு நயினைமடு சின்னடம்பன் ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் கஜேந்திரன் ஆகியயோர் கலந்துகொண்டு அப்பிரதேசங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றியாற்றினர்.

Related Posts