Ad Widget

வவுனியாவில் முச்சக்கர வண்டி எரிப்பு!

வவுனியா, ஓமந்தை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை, மருதங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு இனந்தெரியாதவர்களால் குறித்த முச்சக்கர வண்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியினை ஓமந்தை பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் வழிமறித்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கர வண்டியினை அவ்விடத்திலிருந்து எடுத்துச்சென்றபோது குறித்த இளைஞர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

இவர்களின் நடவடிக்கையில் அச்சமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஓமந்தை மருதங்குளத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு முன்பாக முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.

இதையடுத்து, பின்தொடர்ந்துவந்த இரு இளைஞர்களும் முச்சக்கரவண்டியினை தீ வைத்து எரித்து விட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, முச்சக்கரவண்டியினை தீயிட்டுக் கொழுத்தியவர்களை முச்சக்கர வண்டியின் உரிமையாளர் அடையாளங்காட்டிய போதிலும் பொலிஸார் இதுவரை எவரையும் கைதுசெய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts