Ad Widget

வட்டுக்கோட்டையில் வயோதிபர்களை அச்சுறுத்தி கொள்ளை!

வீட்டில் தனித்திருந்த வயோதிபர்களை அச்சுறுத்தி 55 பவுண் நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அராலி தெற்கு வட்டுக்கோட்டை உடையார்கட்டு பகுதியில் உள்ள வீடொன்றிலையே இக்கொள்ளைச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நடைபெற்று உள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் 62 வயதுடைய கணவர் , மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோர் வசித்து வந்த நிலையில் அதிகாலை வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் வயோதிபர்களை மிரட்டி 55 பவுண் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts