வடமாகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று நன்ணீர் மீன் பிடி குளங்களில் 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டது.
வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டார்.
இதன் போது வவுனிக்குளம், முத்தையான் கட்டு குளம், மடவால சிங்கம் குளம் ஆகியவற்றில் தலை 25 ஆயிரம் மீன் குஞ்சுகள் என்ற வீதத்தில் விடப்பட்டன.
இதனால் சுமார் நன்னீர் மீன்பிடி தொழில் ஈடுபடும் 300 குடும்பங்கள் பயணடைவார்கள் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.