வடமராட்சியில் மீனவர்கள் போராட்டத்தில் குதிப்பு!!!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை, அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்து தடுத்து வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை, அங்கு வந்த பொலிஸார் கைது செய்து அழைத்து செல்ல முற்பட்ட போது, அப்பகுதி மீனவர்கள் அதனை எதிர்த்துள்ளனர்.

மேலும், சட்டவிரோத மீன்பிடி நிறுத்தப்பட வேண்டும் எனவும், இந்த விடயத்தில் தமக்கு சாதகமான முடிவை உரிய தரப்பினர்கள் பெற்றுத்தர வேண்டுமென்றும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றிருந்தன.

இதனையடுத்து கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினர்களும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்த போதிலும், தொடர்ந்தும் அத்துமீறல்கள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீனவர்களை விடுவிக்குமாறு கோரி நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வடமராட்சி மீனவர்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டுமாயின் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் வர வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை, அப்பகுதி மீனவர்கள் நேற்றிரவு மடக்கிக் பிடித்து தடுத்து வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை, அங்கு வந்த பொலிஸார் கைது செய்து அழைத்து செல்ல முற்பட்ட போது, அப்பகுதி மீனவர்கள் அதனை எதிர்த்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர்களை விடுவிக்குமாறு கோரி மீனவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts