Ad Widget

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சியினை வசிப்பிடமாக கொண்ட இரத்தினம் ரவீந்திரன் (வயது 53) என்பவரே இச்சம்பவத்தில் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் நீரிறைக்கும் மின் மோட்டார் பழுந்தடைந்தமையால் அதனை திருத்துவதற்கு அவர் முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வடமராட்சி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts