வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் மக்கள் சிவில் உரிமைக் கழக (பி.யூ.சி.எல்.) விழாவில் பங்கேற்கவென வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளார்.
பி.யூ.சி.எல். அமைப்பு சார்பில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தியாகராய நகர், திருமலை சாலையில் உள்ள வித்யோதயா பள்ளியில் காலை 11 மணிக்கு தொடங்கவுள்ள இந்நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
“பாதுகாப்பையும், இறையாண்மையும் காத்தல்´ என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றுகிறார். இதில் தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சக்கரியா முகமது யாகூப், எழுத்தாளர் வசந்த் கண்ணபிரான் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இந்தியா பயணமாவது குறிப்பிடத்தக்கது