Ad Widget

வடக்கு மக்களுக்கு தங்கம் வழங்குகிறார் ஜனாதிபதி மஹிந்த!

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மீட்கப்பட்ட வடகிழக்கு மக்களின் தங்கம் மீண்டும் அந்த மக்களுக்கே வழங்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

gold-thangam

2379 பேருக்கு தங்கம் பிரித்து வழங்கப்படும் என கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

அதன்படி மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மீள அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் மக்களுக்கு தங்கம் வழங்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related Posts