Ad Widget

வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே எனது எதிர்பார்ப்பு!

வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே தனது எதிர்பார்ப்பு என, அம் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

alunar-reginold-kureyவட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் மல்வத்துபீட அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்து பின், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைதி மற்றும் நல்லிணக்க தகவலை வடக்கு மக்களுக்கு கொண்டு செல்ல தான் தகுதியானவன் எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14ம் திகதி வடக்கின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts