Ad Widget

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சேனா படைப்புழுவின் தாக்கம்

நாடாளாவிய ரீதியில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சேனா படைப்புழுவின் தாக்கம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பயிர் வகைகளில் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களம்தின் வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் இன்று இடம்பெற்ற விடியும்வேளையில் கலந்து கொண்ட அவர் ,சேனா படைப்புழு கடந்த ஒக்டோபர் மாதத்தில் அம்பாறை மாவட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோளப் பயிர்களின் இலை மற்றும் பொத்தியின் நறுமணமே இந்த புழுக்களை ஈர்ப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் பணிப்பாளர் சிவகுமார் குறிப்பிட்டார்.

வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுங்கு பயிரையும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கோவா போன்ற மரக்கறி வகைகளையும், கிளிநொச்சி மாவட்டத்தில் வாழை மரங்களையும், கோப்பி போன்ற பயிர்களையும் இந்தப் படைப்புழு தாக்கியிருக்கிறது. இந்த படைப்புழுவை அழிப்பதற்கு ஏழு வகையான கிருமிநாசினிகள் தெரிவு செய்யப்பட்ட பொழுதிலும், அவை எந்தவித படைப்புழுக்களை அழிப்பதில் தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றுவருவதாகவும் விவசாயத் திணைக்களம்தின் வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Related Posts