வடக்கு ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்ட சுரேன் ராகவன் இன்று (புதன்கிழமை) கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை பத்து மணியளவில் மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து புதிய ஆளுநராக சுரேன் ராகவனை ஜனாதிபதி நியமித்தார்.

இந்நிலையில், இன்று காலை வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் சுரேன், தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts