Ad Widget

வடக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன்?

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றனர்.

லலித் கமகே – மத்திய மாகாண ஆளுநராகவும்
ராஜ கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநராகவும்
வில்லி கமகே – தென் மாகாண ஆளுநராகவும்
ஏ.ஜே.எம். முஸாமில் – வடமேல் மாகாண ஆளுநராகவும்
டிக்கிரி கொப்பேகடுவ – சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும்
சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

எனினும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரின் பெயர்களும் பரந்துரைக்கப்பட்டுள்ளன.

Related Posts