வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றனர்.
லலித் கமகே – மத்திய மாகாண ஆளுநராகவும்
ராஜ கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநராகவும்
வில்லி கமகே – தென் மாகாண ஆளுநராகவும்
ஏ.ஜே.எம். முஸாமில் – வடமேல் மாகாண ஆளுநராகவும்
டிக்கிரி கொப்பேகடுவ – சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும்
சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.
எனினும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரின் பெயர்களும் பரந்துரைக்கப்பட்டுள்ளன.