Ad Widget

வடக்கு அமைச்சர்களின் விவகாரம் : தலையிடப்போவதில்லையென சம்பந்தன் அறிவிப்பு!

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் தான் தலையிடப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவானது விசாரணையின் அடிப்படையில் இரண்டு அமைச்சர்களை பதவி விலகுமாறு அல்லது பதவி விலக்குமாறு அறிக்கையிட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் பிரச்சனையில் தான் தலையிடப்போவதில்லையெனவும், அதனை வட மாகாண முதலமைச்சரே பார்த்துக்கொள்வார் எனவும் இரா சம்பந்தன் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எதிர்வரும் 14ஆம் நாள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடப்படும் என இரா.சம்பந்தன் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts