முடி வெட்டுதல் உட்பட அழகக செயற்பாடுகளுக்கான விலையை வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம்அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட அழகக சங்கத்தின் தலைவர் விவேகானந்தன் அருண் தெரிவித்துள்ளதாவது,
பொருளாதார ஏற்றத்துக்கு ஏற்ப அழகக சங்கம் தமது அங்கத்தவர்களின் ஆலோசனைப்படி விலை அதிகரிப்பொன்றைச் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த அதிகரிப்பு இருக்காது என்று நாம் எதிர்பார்க்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள பொருள்களின் விலையேற்றத்தின் அடிப்படையில் இதனை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இதன்படி அனைத்து அழககங்களிலும் (சலூன்) குறித்த விலைப்பட்டியலை வாடிக்கையாளர்கள் பார்வையிட முடியும். அழககங்களின் சேவை நேரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று மேலும் தெரிவித்தார்.