உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக, வடக்கு மாகாணத்தில், நாளைய தினம் மின்சாரம் தடைப்படவுள்ளது.
நாளைய தினம் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில், மின்சாரம் தடைப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின், வடக்கு மாகாண மின் வழங்கல் கட்டுப்பாட்டு நிலைய பொறியியலாளர் அனுசா செல்வராஜா அறிவித்துள்ளார்