Ad Widget

வடக்கில் இராணுவம் முகாமுக்குள் முடங்க வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

cv-vigneswaranஇராணுவத்தினர் முகாம்களுக்குள் முடங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த பின்னர் தெரிவத்தாட்சி அலுவலருடனான கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், வேட்பாளர்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியாளார் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மிரட்டபட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். அது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடுகளும் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதனால் அது பற்றி கருத்து கூற முடியாது.

தேர்தல் காலங்களில் இராணுவ பிரசன்னங்களால் எங்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்படலாம். எனவே இராணுவத்தினர் இராணுவ முகாம்களுக்குள் முடங்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts