Ad Widget

வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் மது போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாடசாலைகளுக்கு அருகில் மதுபானமும் போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

கல்வித்துறை பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சுமந்திரன் எம்.பி இவ்வாறு  தெரிவித்தார். பாடசாலைகளுக்கு அருகில் அதிக இராணுவ பிரசன்னம்  காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.

 

Related Posts