Ad Widget

ரஷ்ய – பின்லாந்து எல்லைகளில் தடுப்புச் சுவர் அமைக்க பின்லாந்து திட்டம்!!

ரஷ்ய – பின்லாந்து நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைகளில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க பின்லாந்து திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவுடன் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, தனது எல்லைகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர்களை அமைப்பது குறித்து அதன் எல்லைப் பாதுகாப்பு சட்டங்களில் திருத்தங்கள் செய்ய திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போரினால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இருநாடுகளும் மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ள நிலையில்,இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுமார் 1,300 கிமீ வனப்பகுதி நிறைந்த எல்லைகளை ரஷ்யாவுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, தனது எல்லைகளுக்கு தஞ்சம் தேடுவோர்களை அதிகப்படியாக அனுப்பி வைத்து புதிய அழுத்தத்தை ரஷ்யா ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் இந்த பாதுகாப்பு சட்ட திருத்தத்தை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

Related Posts