Ad Widget

ரஷ்யாவிற்கு எதிராக போரிடும் 3,000 பிரித்தானியர்கள்!!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் தரப்பில் சுமார் 3,000 பிரித்தானிய தன்னார்வலர்கள் தற்போது போராடி வருவதாக ஜார்ஜிய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் தற்போது 20,000 வெளிநாட்டு வீரர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன்படி, உக்ரேனிய கட்டளையின் கீழ் உள்ள மற்றொரு இராணுவப் பிரிவானது பெரும்பாலும் வெளிநாட்டினரை உள்ளடக்கியது.

இதன்படி, தற்போது உக்ரைன் தரப்பில் சுமார் 3,000 பிரித்தானிய தன்னார்வலர்கள் போராடி வருவதாக ஜார்ஜிய தளபதி தெரிவித்துள்ளார். எனினும், பிரித்தானிய அரசாங்கம் உக்ரைனுக்கு செல்லும் பிரிட்டன்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக கண்காணிக்கவில்லை.

உக்ரேனியர்களுக்கு உண்மையான தகவல் தெரிந்திருக்கலாம், ஆனால் யாராவது தங்களை பிரித்தானியர்கள் என்று கூறுகிறாரா என்பதை அவர்கள் உண்மையிலேயே சரிபார்க்கிறார்களா என்பது தெளிவாக இல்லை.

உக்ரேனிய அதிகாரிகள் அங்கு போரிடச் சென்ற வெளிநாட்டுப் போராளிகளைப் பற்றி அதிகம் கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை வெளிநாட்டுப் பிரஜைகள் தங்களுடைய சேவைகளைத் தன்னார்வமாகச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது,மேலும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றி தகவல்களும் அதிகம் தெரியாது.

எனினும், அரசாங்கத்தால் நடத்தப்படும் இணையதளம், பிரித்தானியா கனடா உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் தங்கள் புதிய சர்வதேச படையணியில் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts