Ad Widget

ரஷ்யாவிடமிருந்து மற்றுமொரு பகுதியை கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு

ரஷ்ய படைகளிடமிருந்து 37 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கன்னா மல்யார் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை கொண்டு நடத்திய எதிர்தாக்குதல் மூலமாக, கடந்த வாரத்தில் 37 சதுர கிலோமீட்டர் நிலத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கயைம, மெலிடோபோல் மற்றும் பெர்டியன்ஸ்க் பகுதிகளில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், போரின் முக்கிய பகுதியாக திகழும் பக்முட் நகரில் உக்ரைன் கடுமையாக போரிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Related Posts