Ad Widget

ரணில், மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் மஹிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் (புதன்கிழமை) நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடொன்றை செய்திருந்தனர்.

அதில் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதமரின் பெயராக மஹிந்தவின் பெயரே காணப்படுகின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்தே நேற்றைய தினம் மஹிந்த மற்றும் ரணில் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களென நாடாளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Posts