Ad Widget

யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவன் தூக்கிட்டு இரண்டு நாட்கள் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts