Ad Widget

யாழ்.நாவாந்துறையில் வீட்டுக்குள் கிணறு

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வீட்டுக்குள் அமைக்கப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவவும் தேடுதல் நடத்தப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றைய தினம் ஞாயிறுக்கிழமை பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

அதன் போது அப்பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட போது வீட்டினுள் நிலபதிப்பின் கீழ் (மாபிள்) கிணறு ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

வீட்டினுள் கிணறு தோண்டப்பட்டு அதன் மீது பிளாட் போட்டு மாபிள் பதிச்சு கிணற்றினை பாவித்து வந்துள்ளனர். அந்தக் கிணறு தொடர்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை இந்த தேடுதலில் போதே அப்பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் நிலக்கீழ் தளம் (Underground) கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts