Ad Widget

யாழ்.சிறைச்சாலையில் கைதியொருவர் தற்கொலை முயற்சி!

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கைதி சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 23 வயதான இராஜேஸ்வரன் கஜன் என்பவரே தற்கொலை முற்சியில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைதி திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்றும் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

விளக்கமறியலில் உள்ள தன்னை உறவினர்கள் எவரும் பார்க்க வருவதில்லை எனும் மன விரக்தியில் குறித்த நபர் காணப்பட்டார் எனவும் அதனாலயே தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்டு உள்ளார் எனவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts