யாழ்.குடாவில் பரவலாக நேற்று முதல் அடை மழை பெய்து வருகின்றது.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையால் நாடாளாவிய ரீதியில் மழை தொடர்ந்தும் பெய்து வருகின்றது. இதனால் சில இடங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ். குடா நாட்டிலும் கடந்த தினங்களில் இடையிடேயே மழை பெய்து வந்தாலும் நேற்று முதல் பரலவாக இடியுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதனால் வீதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. இதனால் வீதிகளில் பயணிப்போர் பாதிக்கப்படுகின்றனர்.