Ad Widget

யாழ் இந்துக் கல்லூரியில் ஆரோக்கிய உணவகம் திறந்து வைக்கப்பட்டது!!

யாழ்ப்பாண இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் கல்லூரியில் முதன் முறையாக ஆரோக்கிய உணவகம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரோக்கிய உணவக நடைமுறைப்படுத்தல் அதிபரின் அறிமுக உரையுடன் பழைய மாணவர் சங்க செயலாளர் வைத்தியர் கோ.றஜீவ் மற்றும் செயற்குழு உறுப்பினர் யதுராஜ் அவர்களது பங்கேற்றலுடன் நேற்றையதினம் (06.06.2022) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரோக்கிய உணவுகளான இலைக்கஞ்சி , கீரை வடை, அன்னாசி /பப்பாசி பழச்சாறு , கடலை பால் என்பன நேற்றையதினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இலைக் கஞ்சி இலவசமாக வழங்கப்பட்டது.

நேற்றையதினம் தயாரிக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் முடிவடைந்தது என்பது ஆரோக்கியமான உணவுகள் மீதான ஆசிரியர், மாணவர்களின் ஆர்வம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் போது மருத்துவ பீட பீடாதிபதியும் சுகாதார மேம்பாட்டு உபபிரிவு உறுப்பினருமான பேராசிரியர் சுரேந்திரகுமாரன் அவர்களும் கலந்து கொண்டார்.

Related Posts