Ad Widget

யாழ்ப்பாணம் வந்த கொரியத் தூதர் நலன்புரி நிலையங்களுக்கும் விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த தென்கொரிய நாட்டு தூதுவர் சாங்வோன் சாம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுன்னாகம் மருதனார்மடத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்திறக்கு சென்று பார்வையிட்டார்.

Chang Won Sam

ஏற்கனவே திட்டமிட்டதற்கு அமைவாக சபாபதிப்பிள்ளை முகாம் மற்றும் கண்ணகி முகாம்கள் அமைந்துள்ள குறிப்பிட்ட பாதையால் உடுவில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் அழைத்துசெல்ல இந்த வழியில் உள்ள வீடுகளையும் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

இதேவேளை, யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை யாழ். செயலகத்தில் தென்கொரியத் தூதர் சந்தித்தார். அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் சென்று பார்வையிட்டார்.

Related Posts