Ad Widget

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது! குண்டுகளும் மீட்பு

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெ­று­கின்­ற­ வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் தொடர்­பாக ஏழு சந்­தே­க­ ந­பர்­க­ளை ­கை­து­ செய்­துள்­ள­தா­கவும் அவர்­க­ளி­ட­மி­ருந்­து வாள் மற்றும் உள்ளூர் குண்­டுகள் சிலவும் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க­ யாழ்ப்­பா­ண­ பொ­லிஸார் தெரி­வித்­தனர். அரி­யாலைப் பகு­தியில் வைத்து இவர்­களை கைது­ செய்­துள்­ள­தா­க­ பொ­லிஸார் தெரி­வித்­தனர்.

அண்மைக் கால­மா­க யாழ் குடா­நாட்டில் வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களும் ஆயு­த­மு­னையில் வீட்­டா­ரை ­அச்­சு­றுத்­தி ­பணம் நகை­ என்­ப­வற்­றை ­கொள்­ளையிடும் சம்­ப­வங்கள் வெகு­வாக அதி­க­ரித்­தி­ருந்­தன. தினமும் இரவில் அச்­சத்­து­ட­னே­யே­ த­ம­து­ பொ­ழு­து­க­ளை­ மக்கள் கழிக்க வேண்­டி­ய­நி­லையும் ஏற்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே குற்­ற­வா­ளி­களை கைது­செய்­வது தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இத­ன­டிப்­ப­டையில் யாழ்ப்­பாண பொலி­ஸா­ருக்­கு­கி­டைக்­கப் பெற்ற இர­க­சிய தக­வ­லொன்­றை­ய­டுத்து இவ் ஏழு பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து மூன்று வாள்­களும் உள்ளூர் தயா­ரிப்பு கைகுண்­டுகள் இரண்டும் மற்றும் கராத்­தேயில் பயன்­ப­டுத்­தப்­படும் ஜின்யா கட்­டைகள் சிலவும் மீட்கப் பட்­டுள்­ள­தா­க­ பொ­லிஸார் தெரி­வித்­தனர்.

இவ்­வா­று ­கை­து ­செய்­யப்­பட்­ட­ சந்­தே­க­ந­பர்கள் ஏழு பேரும் 23 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவித்ததுடன் இவர்களிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts