Ad Widget

யாழ்ப்பாணத்தில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பணியில்!

சமூக விரோதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயுதந் தாங்கிய காவல்துறைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கேசன்துறை பிரிவுக்குட்பட்ட 17 காவல் நிலையங்களிலும் ஏற்கனவே இந்த காவல்துறைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் இந்த காவல்துறைக் குழுக்கள் பணியில் ஈடுபடும்.

எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற ஐந்து காவலர்கள் ஒவ்வொரு குழுவிலும், இணைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வீதித் தடைகளை ஏற்படுத்தி, சந்தேகத்திற்குரிய வாகனங்களைச் சோதனையிடுவதற்கும் இந்தக் காவல்துறைக் குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts