Ad Widget

யாழில் மூவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

யாழ்ப்பாணத்தில் ரயில் கடவையில் வாயில் மூடியிருந்த போது, பயணித்த மூவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் ஊடாக ஒரு வருட காலத்துக்கு இவ்வாறு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வாயில் மூடியிருக்கும் போது, ரயில் கடவைகளில் பயணிக்க முற்படுபவர்களை கைதுசெய்ய ரயில்வே திணைக்களத்தால் விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் முதற்கட்டமாக கடந்த வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி யாழில் கைதுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரதும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு, 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts