தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காக நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து மீளாத்துயிலில் உறங்கிக் கொண்டிருக்கும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் ஈகச் சுடரினை காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ அவர்கள் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும், தேசத்தின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் பொது மக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து யாழ் ஊடக அமையத்தல் தலைவர் இரட்ணம் தயாபரன், காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ, மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.