Ad Widget

யாழில் துவிச்சக்கர வண்டி கொள்ளைக்காரர் மூவர் கைது

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டிகளை களவாடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21 புதிய துவிச்சக்கர வண்டிகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல நாட்களாக துவிச்சக்கரவண்டிகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.



இதனடிப்படையில் கல்வியங்காடு, குருநகர், பாசையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 வயது முதல் 25 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து களவாடப்பட்ட 21 புதிய துவிச்சக்கர வண்டிகள் மீட்க்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts