Ad Widget

யாழில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன.

இவ்வழிப்பறி தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதன்போது வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார்ச் சைக்கிள் ஒன்றையும், உருக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு பவுண் தங்கத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அரியாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே தலைமறைவாகியிருந்த குறித்த சந்தேகநபரை உப.பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கொள்ளையருக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் உள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts