Ad Widget

யாழில் இலஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு

வடமாகாணத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை ஒன்று யாழில் இடம்பெற்றது.

இன்று காலை 9மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு தலைவர் பாலபெத்த பென்டி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை இல்லாதொழிப்பது தொடர்பிலே இந்த பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் இந்நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி,இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் விமலரட்ண,இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் இயக்குனர் ஜெயந்த விக்கிரமரட்ண, யாழ்.மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts