கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவிற்கான ஆதரவு கூட்டம் யாழ் தீவகம் துறையூரில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த கூட்டத்தில் உரையாற்றினர்.
மேலும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக வேலணை துறையூர் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பொது மக்களும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்து இருந்தனர்.