Ad Widget

மோட்டார் போக்குவரத்து திணைக்கள புதிய கட்டிடம்

யாழ் மாவட்டத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் இன்று (27) திறந்து வைக்கப்பட்டு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

moto-trafic-1

யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள இந்த புதிய கட்டிடத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச். ஹரிச்சந்திர திறந்துவைத்தார்.

இதேவேளை மோட்டார் போக்குவரத்து சேவையினை இலகுபடுத்தும் நோக்கிலும் வாகன சாரதிகளுக்கான அனுமதி பத்திரங்களை விரைவில் பெற்றுக்கொள்ள ஆவண செய்யும் நோக்கிலும் புதிய இணையத்தள சேவை ஒன்றும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச்சேவையின் மூலம் மக்கள் இலகுவாக பயனடைய முடியும் எனவும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள் பிறப்புச்சான்றிதல் மற்றும் தேசிய அடையாள அட்டையினை மாத்திரம் கொண்டு வந்தால் போதுமானது அவற்றின் பிரதிகள் கணனியால் உள்வாங்கப்பட்டு அவர்களிடமே திருப்பி அளிக்கப்படும். அத்துடன் புகைப்படம் எடுக்கும் வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச். ஹரிச்சந்திர தெரிவித்தார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

moto-trafic-2

moto-trafic-3

Related Posts