Ad Widget

மேலும் 7 பேர் அகதிகளாக தழிமகத்தில் தஞ்சமடைந்தனர்!

நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் பேர் இன்று (19) காலை தமிழகத்தின் தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 116 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் யாழ்பாணம் மாவட்டம் நாவர்குழியை சேர்ந்த மேரி அகஷ்டா (44) அவரது இரண்டு குழந்தைகள் மேலும் திரிகோணமலை மாவட்டம் அனந்தபுரியை சேர்ந்த மகேசன் (39), அவரது மனைவி தேவி (38), அவர்களது இரண்டு குழந்தை என மொத்தமாக 7 பேர் இலங்கையிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஐந்தாம் மணல் தீடை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்றடைந்தனர்.

தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையானர் 5 மணல் தீடையிலிருந்த இலங்கைத் தமிழர்களை படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு பிறகு 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்திற்கு வந்த இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts