Ad Widget

மேலும் 15 பேர் தமிழகத்தை சென்றடைந்தனர்!

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அவர்களில் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இந்தநிலையில், அவர்களை முகாம்களுக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts