மற்றுமொரு தொகை சமையல் எரிவாயு நேற்று இரவு நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 3 ஆயிரத்து 309 மெட்ரிக் டொன் எரிவாயு நாட்டை வந்தடைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று பிற்பகல் முதல் எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் மக்கள் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.