அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் இலங்கைப் பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் 21 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த 48 வயதான பெண் தனது கணவருடன் 1999ம் ஆண்டு மெல்போன் நகரில் குடியேறியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த வேளை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சந்தேகநபர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வீட்டினுள் நுழைந்திருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் அங்கிருந்த பொருட்கள் எதுவும் கொள்ளையிடப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவரவில்லை.