Ad Widget

முதல்வர் தலைமையில் ஆரம்பமானது எழுக தமிழ் பேரணி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான எழுக தமிழ் பேரணி நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக முன்றலில் மற்றொரு பேரணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது்.

இவ் பேரணியானது, யாழ் நல்லூர் கோயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ் முதலாம் குருக்கு வீதி, பலாலிவீதி, யாழ் அஸ்பத்திரி வீதியூடாக சென்று யாழ் திறந்த வெளியில்யில் மக்கள் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதனை தழிழ் மக்கள் பேரவை இதனை எற்பாடு செய்துள்ளனர்.

இந்த பேரணிக்கு ஆதரவு வழங்கி யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ் ஆர்பாட்ட பேரணியில் இந்து, கிறிஸ்தவ மதகுருமார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்,தொழல் அமைப்புக்கள், மீள்குடியேற்ற மக்கள் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

1795307774eluha

14368829_1489720314387698_5978756872601785794_n

14368701_1489720194387710_3951513967277649964_n

14445985_1489720171054379_7650480485515988776_n

14441168_1186233091435638_4621015090623970689_n

Related Posts