Ad Widget

முகமூடி நபர்கள் தாக்கியதில் இளைஞன் படுகாயம்

மருதனார்மடம் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணைக்குள் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை புகுந்த 5 பேர் கொண்ட குழு, அங்கு கள் அருந்திக்கொண்டிருந்த இளைஞனை கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இணுவில் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts