சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை என்ன காரணத்துக்காக எங்கிருந்து கொண்டுவந்ததான தகவல்களை, அவ்வீட்டின் உரிமையாளரான சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் பழைய வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த வாகனத்துக்குள்ளேயே, மேற்படி அங்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அவற்றிலிருக்கும் வெடிபொருட்களை மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தவே எடுத்து வந்ததாகவும் அச்சந்தேகநபர் கூறியுள்ளார்.