Ad Widget

மீனவர்கள் பிரச்னைக்கு பதிலளிக்க பிரதமர் ரணில் மறுப்பு

திருமலையில் சாமி தரிசனம் செய்ய சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீனவர்கள் பிரச்னை குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இந்தியா சென்றுள்ளார். இதற்காக நேற்று இலங்கையில் இருந்து, தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டு, ரேணிகுண்டா விமான நிலையம் சேர்ந்தார்.

அங்கிருந்து கார் மூலம் திருமலை சென்றார். பின்னர் நேற்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்கினார். ரணில் வருகையை ஒட்டி, திருமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்திய-இலங்கை இடையேயான உறவு வலுப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து தனிவிமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Related Posts