Ad Widget

மிருசுவிலில் இராணுவ பவுசர் மோதி பெண் படுகாயம்!!

கொடிகாமம், மிருசுவிலில் இராணுவ பவுசர் மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சம்பவத்தையடுத்து இராணுவ பவுசர் வாகனம் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts